பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து அடுத்தடுத்து 3 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் சிறைச் சாலையின் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறை நூறாண்டுகள் பழமையானது, பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய சுமார் ஆயிரத்து 300 பேர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சிறைக் காவலர்கள் 150 பேர், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து மூன்று கைதிகள் தப்பி ஒட்டியுள்ளனர். சிறை அங்காடியில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்த டேவிட் என்ற ஆயுள் கைதி, தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜீவா உள்ளிட்ட 3 கைதிகள் அடுத்தடுத்து சிறையில் இருந்து தப்பியதற்கு சிறை அலுவலர்கள் மற்றும் உளவுத்துறையின் அலட்சியமே காரணம் என புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிறையில் தலைமை காவலராக இருந்த கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து கண்காணிப்பாளர், சங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து தப்பிய மூன்று பேரில் புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற கைதியை மட்டும் போலீசார் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…