அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய ராட்சத ராக்கெட்டை முதல் பயணமாக நிலவிற்க்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS) என அழைக்கப்படும் இந்த ராக்கெட்டை ஆகஸ்ட் 29 ஆம் தேதி விண்வெளி பயணத்திற்காக, ப்ஃளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள 39B ஏவுதளத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த முதல் சோதனை பயணத்தில் விண்வெளிவீரர்கள் இல்லாமல் செல்கிறது. மேலும், எதிர்கால பயணங்கள் 50 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக சந்திரனின் மேற்பரப்புக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, நாசா SLS ஐ உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க ராக்கெட் தொழிலதிபர் எலோன் மஸ்க் டெக்சாஸில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் அதைவிடப்பெரிய ராக்கெட்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவர் தயாரிக்கும் ராட்சத ராக்கெட்டிற்க்கு ஸ்டார்ஷிப் என்று பெயரிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், “விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்ல ஓரியனுடன் இணைப்பதன் மூலம் எதிர்கால ஆர்ட்டெமிஸ் பயணங்களில் முக்கிய பங்கை வகிக்கும்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…