மழை காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கனமழையால் நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட சாலைகளில் வெல்ல நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கங்கே போக்குவரத்து பாதிக்கப்படுவது. மேலும் கனமழை காரணமாக நேற்று சென்னையில் இரவு முதல் அதிகாலை வரை 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, தோகா, துபாய், மும்பை விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத், பெங்களூரு திரும்பின. அதேசமயம், மலேசியா, தாய்லாந்து, தில்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 12 விமானங்கள் நடுவானில் வட்டமடித்தன. மேலும் 12மணிக்கு மேல் இடி மின்னல் குறைந்ததால் ஒவ்வொரு விமானமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…