சென்னையில் காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நீலாங்கரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவு காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயகுமார் என்பவரும், இசக்கிபாண்டியன் எழும்பூர் குற்றப்பிரிவுக்கும், அம்மு ஆதம்பாக்கம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
பரங்கிமலை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்குக்கு கொத்தவால்சாவடி குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த செல்லப்பா மாற்றப்பட்டுள்ளார். மேலும் புளியந்தோப்பு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கு புளியந்தோப்பு குற்றப்பிரிவில் இருந்த ஜானகிராமனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். மேலும் நுண்ணறிவுப் பிரிவில் இருந்த புஷ்பராஜ் யானைக்கவுனி சட்டம்&-ஒழுங்கு பிரிவுக்கும், கோயம்பேடு குற்றப்பிரிவுக்கு அண்ணாநகர் சட்டம்& ஒழுங்கில் இருந்த ராஜேஷ்பாபுவும் என மொத்தம் 32 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தங்களது வசதிக்காக ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறிள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…