நேற்று ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கோர விபத்துக்களில் சிக்கி 34 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் காஸியான்டெப் மாகாணத்தில் ஒரு நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் மோதிக்கொண்ட முதல் விபத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது, அங்கு வந்த மற்றொரு பயணிகள் பேருந்து மோதியது.
இதில் மூன்று துணை மருத்துவர்கள், மூன்று தீயணைப்பு வீரர்கள் மற்றும் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லுவை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…