Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொஞ்சம் கண் அசந்துட்டோம்.. அது ஒரு பிரச்சினையா.. நடுவானில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு!!

Sekar August 20, 2022 & 11:14 [IST]
கொஞ்சம் கண் அசந்துட்டோம்.. அது ஒரு பிரச்சினையா.. நடுவானில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு!!Representative Image.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சூடானில் இருந்து எத்தியோப்பியா நோக்கிப் பயணித்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இரு விமானிகளும் நடு வானில் தூங்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இடி343 விமானம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்தை நெருங்கியபோது விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டு அலெர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த விமானம் நீண்ட நேரமாக தரையிறங்கத் தொடங்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் தரையிறங்காமல் இருந்த நிலையில், ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் அதிகாரிகள் விமானத்தின் பணியாளர்களைத் தொடர்பு கொள்ள முயன்றனர். அதே நேரத்தில் விமானம் ஆட்டோமேட்டிக் மோடில் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. 

பின்னர் விமானம் ஓடுபாதைக்கு மேல் சென்றபோது, ​​ஆட்டோமேட்டிக் பைலட் சிஸ்டம் அணைக்கப்பட்டது. இதனால் அலாரம் ஒலித்தது. பின்னர் விழித்துக் கொண்ட விமானிகள், சம்பவம் நடந்த 25 நிமிடங்களில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்