உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 346 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் 3 மாதங்களை தாண்ண்டி இன்னும் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்த போர் காரணமாக இதுவரை உக்ரைனில் சுமார் 346 குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த தகவல்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்றும், இது தற்காலிக தரவுகள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யப் படைகளின் இடைவிடாத குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களால், உக்ரைனில் 2,108 கல்வி நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன, அவற்றில் 215 முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனுக்குள் 3 மில்லியன் குழந்தைகளுக்கு இப்போது மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக கூறியிருந்தது. மேலும், போர் காரணமாக இடம்பெயரும் குழந்தைகள், பெண்கள், குடும்பப் பிரிவினை, வன்முறை, துஷ்பிரயோகம், பாலியல் சுரண்டல் மற்றும் கடத்தல் போன்ற ஆபத்தில் சிக்கிகொள்வதாக தெரிவித்துள்ளது. ஐ.நாவின் கூறுப்படி ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் கிட்டத்தட்ட இரண்டு பேர் சண்டையால் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளவிலான உனவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…