Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பப்ஜி விளையாட்டால் விபரீதம்...ஒருவருக்கு கத்திக்குத்து...4 பேர் கைது..!

madhankumar June 16, 2022 & 13:09 [IST]
பப்ஜி விளையாட்டால் விபரீதம்...ஒருவருக்கு கத்திக்குத்து...4 பேர் கைது..!Representative Image.

தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியதாக பப்ஜி மற்றும் ப்ரீ பயர் ஆகிய ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளன. இதனை விளையாடும் பொது அவனை விடாத கொள்ளு, அவனை போடு, சூடு, என்னும் மாணவர்களின் வாயில் இருந்த வரக்கூடாத வார்த்தைகளெல்லாம் வருகிறது என பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் தங்களது வாழக்கையையே முடித்து கொள்ளும் அளவிற்கு முடிவுகளை எடுக்கின்றனர். தற்கொலை, சக நண்பர்களை கொள்ளுதல், ஏன் சமீபத்தில் பெற்ற தாயை கொலை செய்து பிணத்துடன் 2 நாட்கள் மகன் தங்கியிருந்த நிகழ்வுகள் கூட நடந்தது.

அந்த வகையில் பூந்தமல்லி திருமழிசை அடுத்த கூடப்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அவருடைய நண்பர் சசிகுமார். இவரின் வீட்டின் அருகே பப்ஜி கேம் எப்போது விளையாடுவர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அது வளர்ந்து அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் தனது மற்ற நண்பர்களை அழைத்துவந்து சண்டை போட்டுள்ளார், அப்போது தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சசிகுமாரை குத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் செல்வம் சாமுவேல் அபிலேஷ் விஜயகுமார் 4 பேரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். அஜித்குமார், சசிகுமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்