சட்டப்பேரவையில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாற்றுத்திறனாளிகளின் திருமணம் கோவிலில் வைத்து நடத்தப்பட்டால் அவர்களுக்கு கட்டணம் ஏதும் விதிக்கப்படாது. மேலும் பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அமைச்சரின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் அனைத்து திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மானிய கோரிக்கை விவாதத்தில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடத்தப்படும். பராமரிப்பு கட்டணம் மற்றும் செலுத்தினாலே போதுமானது.
அதோடு மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு திருமணத்திற்கான புத்தாடைகள் கோவில் நிர்வாகம் சார்பாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை இந்து அறநிலையத்துறை சாரிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…