திருவள்ளூர் மாவட்டத்தில் 4 வெவ்வேறு பகுதிகளில் இளம் பெண்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூவம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மற்றும் மாலா தம்பதியின் மகள் ஸ்வேதா (19). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த 9ம் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகள் மீண்டும் வீடு திரும்பவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி ஹரிதா (19) இவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி சென்றுள்ளார், பின் வீடு திரும்பவில்லை.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி ஜாய்ஸ் ரூபாபதி இவர்களது மகள் கலைச்செல்வி (32) இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெற்றோருடன் வசித்துவந்தார் திருவள்ளூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் மாயமாகிவிட்டார்.
பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேர்வாய் கண்டிகை காமராஜர் சாலையில் வசித்து வருபவர் பொன்னுசாமி. இவரது மகள் சாருமதி (21) பாலிடெக்னிக் முடித்துவிட்டு அங்குள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் பணி குறித்து விசாரிக்க சென்றபோது மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில், அந்தந்த காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 இளம்பெண்கள் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…