சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் பட்டியலினத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் இரண்டு பேர் இறந்துவிட்டதாலும் மூன்று பேர் சிறார்கள் என்பதாலும் மீதமுள்ள 27 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில் சிவகங்கை வன்கொடுமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 27 பேர் அங்கு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…