Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி....!

madhankumar July 14, 2022 & 14:46 [IST]
மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி....!Representative Image.

துணி உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி நகரில் பீடி தொழிலாளர்கள் காலனியை சேர்ந்தவர் அகமது (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பர்வீன் (30) என்ற மனைவியும், மஹீம் (6) என்ற ஒரு மகளும், பைசான் (5), அத்னான் (3) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிறிய ஓலை வீட்டில் வசித்து வந்தார்.

பைசான் தனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் 4 பேர் மட்டும் இருந்துள்ளனர். அப்போது வீட்டில் கட்டியிருந்த கம்பியில் துணியை உலர்த்த போடும்போது மின்சாரம் தாக்கியுள்ளது, அதனை பார்த்த முகமது அவரை காப்பாற்ற சென்றுள்ளார், இதனால் அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. பெற்றோர்கள் விழுவதைப் பார்த்த அவர்களது மகள் மஹீம், மகன் அத்னான் ஆகியோர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து மின்சாரத்தை துண்டித்து நால்வரையும் மீட்க முயற்சித்துள்ளனர், ஆனால் அவர்கள் உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்