Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து…போட்டோவை முதல் கணவனுக்கு அனுப்பி வெறுப்பேற்றிய 40 வயது பெண்! பகீர் பின்னணி

Priyanka Hochumin September 19, 2022 & 11:30 [IST]
கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து…போட்டோவை முதல் கணவனுக்கு அனுப்பி வெறுப்பேற்றிய 40 வயது பெண்!  பகீர் பின்னணிRepresentative Image.

ஃபேஸ்புக் மூலம் 25 வயது இளைஞனை திருமணம் செய்து கொண்ட 40 வயது பெண். திருமண போட்டோவை முதல் கணவருக்கு அனுப்பி வெறுப்பேத்திய சம்பவம் முழு பின்னணி இதோ.

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 40 வயது பெண் திருமணமாகி 22 மற்றும் 21 வயதான இரண்டு மகன்கள் உள்ளனர். தன்னுடைய கணவர் வேலைக்காக சிங்கப்பூர் சென்றதால், தன்னுடைய மகன்களின் படிப்பிறகாக ஒரத்தநாடு டவுன் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இரண்டு மகன்களுடன் தங்கியுள்ளார். மூத்த மகன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தும், இரண்டாம் மகன் 2 ஆம் ஆண்டு கல்லூரியிலும் பயின்று வருவதால் அந்த பெண் இகவும் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

என்ன தான் கணவன், இரண்டு மகன்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பதால் தினமும் அதிக நேரத்தை ஃபேஸ்புக்கில் கழித்துவந்துள்ளார். அப்படியாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளைஞரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் இருவரும் சேட் செய்து கவர்ச்சி படங்களை அனுப்பும் அளவிற்கு இருவரும் பழகியுள்ளனர். அது நாளாக காதலாக மாறி இருவருக்கும் இடையே ஆழமான காதல் மலர்ந்தது. திடிரென்று ஒரு நாள் அந்த இளைஞர் " இன்னும் எத்தனை நாள் நாம் ஃபேஸ்புக் மூலம் காதலிப்போம். உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்".

உடனே அவர் ஒரத்தநாடு வந்து வாடைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஆட்டோ ஒட்டிக்கொண்டு அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காலையில் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த பெண் யாருக்கும் தெரியாமல் இந்த இளைஞருடன் வெளியில் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். பிறகு சிறிது நாட்களில் அந்த பெண் கர்பமானதால் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எடுத்துக்கொன்று கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

இருவரும் கடலூரில் இருக்கும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளனர். பிறகு காலையில் எழுந்து பார்க்கும் போது நகை, பணம் மற்றும் தாயாரை காணவில்லை என்று பதறிய மகன்கள் சிங்கப்பூரில் இருக்கும் தந்தையிடம் இந்த தகவலை தெரிவித்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இப்படியாக இருக்கும் நிலையில், தன்னுடைய கள்ளக்காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய முதல் கணவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, தான் 4 மாதம் கர்பமாக இருப்பதாகவும் இனி இவருடன் வாழ போவதாகவும் ஆடியோ மெசேஜை அனுப்பியுள்ளார்.

இப்படியாக முதல் கணவன் உயிரோடு இருக்கும் போதே கள்ளக்காதலனுடன் கர்ப்பமாகி அவர்கள் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படத்தை முதல் கணவனுக்கு அனுப்பி வெறுப்பேற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்