கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் பெரும் போராட்டத்திற்குக் காரணமான ஸ்ரீமதியின் வழக்கே இன்னும் முடிவு பெறாத நிலையில், தற்போது 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் புவனகிரியை அடுத்த பரங்கிப் பேட்டை அகரம் பெரிய கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் என்பவர். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் பெயர் ருத்ரா தேவி. 17 வயது வயதான ருத்ரா தேவி, ஆண்டாள் முள்ளிபள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த மாதம் 7 ஆம் நாள் ருத்ரா தேவிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்துள்ளது. இந்த விழாவில், ஒரு சில விஷயத்தில் ரத்தினத்துக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால், ருத்ரா தேவி மிகுந்த மன வறுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ருத்ரா தேவியின் அப்பாவான ரத்தினம் மற்றும் அவரது மனவி வெளியே சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத இந்த சமயத்தில் ருத்ரா தேவி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்கு திரும்பிய ருத்ரா தேவியின் பெற்றோர், ருத்ரா தேவி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, உடனடியாக ருத்ரா தேவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…