தமிழகத்தில் நேற்றுக்கு முந்தைய தினம் வெளியிடப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 47,000 மாணவ மாணவிகள் தாய் மொழி தமிழில் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இருமொழிக் கொள்கை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளையே பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்து படிக்கின்றனர்.
தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் தமிழ் பாடத்தில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் தோல்வியடைந்துள்ள நிலையில், இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும் என கல்வியியல் நிபுணர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தமிழ் மொழி மீது மாணவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கல்விமுறையை மாற்றுவது குறித்தும் அரசு ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தால் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் எடுத்து மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Thiruchitrambalam first single தாய்க்கிழவி பாடல் ரிலீஸ் ஆகப்போகுது... வேற லெவல்தான் DnA!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…