Tamilnadu News Live : தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை நேற்று இரவு 8 மணிக்குள் கல்வி அனைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு நபர் பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளனர். இதனால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசுப் பள்ளிகள் கல்லூரிகளில் 10571 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணையை செப்டம்பரில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…