Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2 தலை பாம்பை கடத்திய 5 பேர்...கேரளாவில் கைதான தமிழகத்தை சேர்த்தவர்கள்.!

madhankumar May 30, 2022 & 16:52 [IST]
2 தலை பாம்பை கடத்திய 5 பேர்...கேரளாவில் கைதான தமிழகத்தை சேர்த்தவர்கள்.!Representative Image.

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதி வனத்துறை விஜிலன்ஸ் (டி.எப்.ஓ) அதிகாரியான சுனில் குமாருக்கு, ஒரு கும்பல் 2 தலை கொண்ட பாம்பை கடத்தி வந்து ஒரு வீட்டில் வைத்து இங்கு விற்பனை செய்யப்போவதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் அந்த வீட்டில் சென்று சோதனை செய்ததில் அங்கு இரண்டு தலை கொண்ட மண்ணுளி பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த 5 பேர் தப்பிக்க முயாண்டபோது அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்தவர் ராஜாமுகமது(39). மலப்புரம் எலங்கூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்(42) எடவன்னம் பகுதியை சேர்ந்தவர் கமருதீன்(40) காசர்கோட்டை சேர்ந்தவர் அனிபா முகமது(46). ஆலப்புழா சேர்த்தலாவை சேர்ந்தவர் ஆனந்தன்(28) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் திருப்பூரிலிருந்து 2 லட்சம் ரூபாயை கொடுத்து 2 தலையுள்ள பாம்புகளை வாங்கி வந்து கேரளாவில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் பாம்பை வாங்குவதாக கூறிய நபரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்