Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாகை அருகே தவில் வாசிக்கும் 5வயது சிறுவன் - குவியும் பாராட்டு

Baskaran Updated:
நாகை அருகே தவில் வாசிக்கும் 5வயது சிறுவன் - குவியும் பாராட்டுRepresentative Image.

நாகை: கீழ்வேளூரில் இசைக்கச்சேரியில் தவில் வாசிக்கும் 5வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு மாடவிளாக பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகன் சாய் வெங்கடேஷ்(5). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் தந்தை அதேப் பகுதியில் உள்ள கோவிலில் நாநஸ்வர கலைஞராக பணிபுரிவதோடு, இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார். அப்போது மகன் சாய் வெங்கடேஷூம் செல்வது வழக்கம். அங்கு தவில் வாசிப்பதை நுணுக்கமாகக் கவனித்து வந்த சிறுவன் தற்போது நாதஸ்வர இசைக்கு ஏற்ப வாசித்து வருகிறார். சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்