திமுக எம்.பி ஆ. ராசாவின் 55 கோடி மதிப்பிலான நிலத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
கோவையில் உள்ள திமுக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு செந்தமான 45 ஏக்கர் அளவிலான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த 45 ஏக்கர் நிலத்தை ஆ.ராஜா 2004 - 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பொழுது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சப் பணத்தில் இருந்து இந்த நிலத்தை வாங்கிய காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 66. 93 கோடி அசையா சொத்துக்களையும் ஆக்சிஸ் வங்கியின் பண மோசடி வழக்கிற்காக பறிமுதல் செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…