இந்தியாவில் இருக்கும் முப்படைகளிலும் இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைக்கும் முறையான அக்னிபாத் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகள், கிளர்ச்சிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜூன்24 ம் தேதி அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப்பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் பிரிவினருக்கான முன்பதிவு ஜூலையில் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய விமான படையில் சேருவதற்கு ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவும், அத்துடன் இதற்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் எனவும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை careerindianairforce.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இந்திய விமானப்படை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .
இதனையடுத்து விமானப்படையை தொடர்ந்து கப்பற்படையிலும் ஆட்கள் சேர்ப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியாகி 3 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இதுவரை இத்திட்டத்தில் இணைய 57000 இளைஞர்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் அக்னிபாத் திடம் குறித்து நல்ல விழிப்பு உணர்வு இருந்து வருகிறது. குழப்பம் விளைவித்தது இளைஞர்கள் பெயரில் சமூக விரோதிகளாக இருக்கலாம். அல்லது அவர்களுடைய பின்னணியில் வேறு யாரோ இருக்கலாம் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…