இந்தியாவில் 5ஜி சேவை முதல் கட்டமாக 13 நகரங்களில் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் 5ஜி சேவைக்கான நடைபெற்ற ஏலத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகமாக ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் முதல்கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…