இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு மத்திய அரசால் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நாவல், சிறுகதை, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டுகிறது.
இதனையடுத்து, 2022-ம் ஆண்டுக்கான சாகித்ய அகடாமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யுவ புரஸ்கார விருது, “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்” என்ற கவிதை தொகுப்பிற்காக எழுத்தாளர் காளிமுத்துவுக்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது மல்லிகாவின் வீடு நூலுக்காக ஜி. மீனாட்சிக்கு வழங்கப்பட உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…