இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணியளவில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று, சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஆளுநர் தேசியக்கொடி ஏற்றுவது தான் வழக்கம். ஆனால் காந்தி சிலை அமைந்துள்ள பகுதிகளிலும் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால், இந்த ஆண்டில் மட்டும் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்துள்ளது.
சமீபத்தில் சட்டசபை உரையின்போது முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே மோதல் வெடித்தாலும், ஆளுநர் கொடியேற்றும் இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் முதல் நபராக வந்து கலந்து கொண்டார். மேலும் ஆளுநர் வரும்போது அவருக்கு பூங்கோத்து கொடுத்து வரவேற்கவும் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் தேநீர் விருந்து வைக்கப்பட உள்ளது.
இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் நேரடியாக தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…