புதுச்சேரியில் சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்த 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி நெயில் பாலிஷ் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெட்டப்பாக்கம் இந்திரா நகர் 2வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் கனிமொழி என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். கனிமொழி கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், 3 மகள்களும் தாயுடனேயே வசித்து வந்ததோடு, அருகில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகின்றனர்.
கனிமொழி அருகில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு கிளம்பும்போது மூத்த மகளுக்கும் இரண்டாவது மகளுக்கும் யார் முதலில் குளித்துவிட்டு கிளம்புவது என சண்டை வெடித்துள்ளது.
அப்போது தாய் கனிமொழி இருவரையும் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனினும் இதில் இரண்டாவது மகள் அக்கா மீதும், அம்மா மீதும் கோபத்தில் இருந்த நிலையில், வீட்டிலிருந்து கிளப்பும் தாயிடம் பேசாமலேயே சென்றுள்ளார்.
மேலும் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில், நெயில் பாலிஷ் மற்றும் அதை நீக்கும் தின்னரையும் கலக்கி ஒன்றாக குடித்துவிட்டார். இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், நிலைமை மோசமடையவே பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே மாணவி இறந்துவிட்டார். இது குறித்து மாணவியின் தாயார் போலீசுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அக்காவுடன் சண்டை போட்டுக்கொண்டு, தங்கை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…