பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இன்று எட்டு சிவிங்கை புலிகளை பிரதமர் மோடி தேசிய பூங்காவில் விடுவிக்கிறார்.
நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கை புலிகளை ஏற்றிக்கொண்டு வந்த இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் நேற்று இரவு புறப்பட்டு, இன்று காலை 7:50 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியரில் தரையிறங்கியது.
இந்த எட்டு சிவிங்கை புலிகளில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் ஆகும். நமீபியாவில் இருந்து புராஜெக்ட் சீட்டாவின் ஒரு பகுதியாக இவை கொண்டு வரப்படுகின்றன. இது உலகின் முதல் கண்டங்களுக்கு இடையேயான பெரிய காட்டு விலங்கு இடமாற்றத் திட்டமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குனோ தேசிய பூங்காவில் பிரதமர் சிவிங்கை புலிகளை விடுவிப்பது, இந்தியாவின் வனவிலங்குகள் மற்றும் அதன் வாழ்விடத்தை புத்துயிர் அளிப்பது மற்றும் பல்வகைப்படுத்துவது என்பதற்கான அவரது முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…