Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

65 மணி நேர போராட்டம் வீண்.. 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!!

Sekar Updated:
65 மணி நேர போராட்டம் வீண்.. 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!!Representative Image.

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் டிசம்பர் 6 ஆம் தேதி 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த எட்டு வயது சிறுவன் தன்மய் சாஹு 65 மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு அதிலிருந்து மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்தார். அவரது உடல் பெதுல் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்பகுதி முழுவதும் கற்கள் இருந்ததால், நான்கு நாட்களுக்கும் மேலாக இந்த மீட்பு நடவடிக்கை தாமதமானது. டிசம்பர் 6ஆம் தேதி சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். 

தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வேறு வயலுக்குச் சென்று திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். சிறுவனை வெளியே எடுப்பதற்காக அதற்கு அருகில் மற்றொரு சுரங்கப்பாதை தோண்டி மண் அள்ளும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றின் 55 அடியில் தன்மய் சாஹு கடந்த வெள்ளிக்கிழமை இரவு 65 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டார். உடலை வெளியே எடுத்தபோது குழந்தை இறந்துவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநில பேரிடர் மீட்புப் படை, ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் கடந்த நான்கு நாட்களாக சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்