தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனலும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்று குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில், ஓட்டுனருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு 2,012 ரூபாய் அதிகபட்சமாக 7,981 ரூபாய் வரை என்றும், நடத்துனருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு 1965 ரூபாய் முதல் அதிகபட்சமாக 6,640 ரூபாய் வரை என முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், இந்த பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டனர். ஆனால், முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் உடன்படாத சிஐடியூ மற்றும் ஏஐடியுசி ஆகிய தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…