தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் நிகழ்த்துவருகிறது. இதற்கு எதிராக தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும், மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளத்தான் காரணமாக மேலும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.
மிகுந்த மன அழுத்தம் காரணமாக திருவாரூர் 9 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளிப்பட்டு தாலுக்கா ராமாநாயுடு கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் தாமு (வயது 45). டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (30) கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பரிதாபமாக பலியானார். இந்த தம்பதிக்கு கங்கோத்திரி (14) உள்ளிட்ட 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கீச்சலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த கங்கோத்திரி தனது தாய் இறந்த அன்றிலிருந்தே மிகுந்த மன அழுத்ததில் இருந்துள்ளார், இந்நிலையில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து தகவல் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது, இதன் பின்னர் அங்குஇ வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மாணவி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? இது தற்கொலை தானா? பள்ளியில் ஏதேனும் பிரச்சினையா? அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்சினையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…