புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெங்காலி நடிகை ஒருவர் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பெங்காலி நடிகையான ஆண்ட்ரிலா சர்மா, கடந்த நவம்பர் 1 ஆம் தேதி அன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது மூளைக்குள் இரத்தக்கசிவு இருப்பதைக் கண்டறிந்தனர். இதனால், பக்கவாதம் ஏற்பட்டதுடன் அவரது உடலின் ஒரு பகுதி செயலிழந்து கோமா நிலைக்குச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு இவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மிகத் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு 24 வயது இளம் நடிகை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள், திரையுலக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…