கள்ளக்குறிச்சி அருகே மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவற்றின் மனைவி அமுதா (வயது 28). இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அமுதா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என பார்க்க நினைத்த தம்பதி, இதற்காக சட்டவிரோதமாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள அசகளத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மெடிக்கலை நாடியுள்ளனர்.
அங்கு சோதனை செய்யப்பட்டதில் மூன்றாவதும் பெண் குழந்தை என உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 17 ஆம் தேதி அதே மெடிக்கலில் அமுதாவுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. கருக்கலைப்பு முடிந்து அமுதா வீட்டிற்கு வந்த நிலையில், அவருக்கு அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அமுதாவை அருகிலுள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு பதறியடித்து கொண்டு சென்றுள்ளனர். அங்கு அமுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அமுதா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் உண்மை முழுவதும் தெரியவந்தது அடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…