சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்த ஷியாம் என்பவர் தனது வீட்டில் ஏ.சி.இயங்கியதால் அறையில் உள்பக்கமாக பூட்டி உறங்கிக் கொண்டிந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் அறையில் இருந்து புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட அவரது தந்தை பிரபாகர் கதவை உடைத்து பார்த்தபோது மகன் ஷியாம் தீக் காயங்களுடன் படுக்கையில் கருகி நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்த ஷியாம் என்பவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்துள்ளது. மனைவி தாய் வீட்டுக்கு சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அவரது அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி.வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஷ்யாம் வீட்டுக்கு சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஏ.சி.வெடிப்புக்கு மின்கசிவு காரணமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…