சமீபகாலமாக நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை பயன்படுத்தி தனது காரை எந்த பழுதுமின்றி 1.20 லட்சம் கி.மீட்டர் வரை பயணித்துள்ளது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
பெங்களூருவில் வசித்து வருபவர் அவினாஷ் நாராயணசாமி (வயது 40). இவர் சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார். அதனை கடந்த 9 ஆண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயைக் கொண்டு இயக்கி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
இவர் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களை குறைந்த விலையில் பெற்று அதனை பயன்படுத்தி தனது காருக்கு தேவையான எரிபொருளை பயன்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது 1 லிட்டர் எண்ணெயில் இருந்து சுமார் 700 முதல் 800 மி.லிட்டர் வரையிலான எரிபொருள் கிடைக்கிறது எனவும் மேலும் 1 லிட்டருக்கு 15 முதல் 17 கி.மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இந்த எரிபொருளைக் கொண்டு இதுவரை 1.20 லட்சம் கி.மீ., வரை கார் பயணித்துள்ளது. இருப்பினும் காரின் இன்ஜினுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியுள்ளார். இதிலிருந்து வரும் புகை மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில், குறைவாக இருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பயோ' எரிபொருள் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.
இது மட்டுமல்லாமல், இது தவிர சமையல் எண்ணெயில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் போது, வீணாகும் கழிவுகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவற்றில இருந்து இருந்து கை கழுவும், வீட்டை சுத்தம் செய்யும் கிருமி நாசினியையும் தயாரித்து அசத்தி வருகிறார். இது போன்ற அரிய யற்சிகளை கவுரவித்து ‘இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்திலும் அவினாஷ் நாராயணசாமி இடம் பெற்றுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…