கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் சர்ச்சையான நிலையில் பள்ளி உரிமையாளரின் அறையில் ஆணுறைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனையடுத்து அந்த பகுதி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பள்ளியின் பேருந்துகள் மற்றும் சொத்துக்கள் சூறையாடப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் நடந்த பள்ளி உரிமையாளரின் அறையில் ஆணுறைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…