தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தாய் இறந்ததை மறைத்து 10ஆம் வகுப்பு படிக்கும் மகள்களை தந்தை தேர்வெழுத அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பெரியசாமி-முத்துமாரி தம்பதி ஆகியோரின் மகள்கள் வானீஸ்வரி கலாராணி ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடு மேய்க்கச்சென்ற இவர்களின் தயார் முத்துமாரி சாலையில் கார்மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் மகள்களுக்கு மறுநாள் தேர்வு இருப்பதாய் அறிந்த பெரியசாமி அவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்களிடம் அம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார், எனக்கூறி அவர்களை தேர்வு எழுத அனுப்பி வைத்துள்ளார். தேர்வு முடிந்து வீடு வந்த அவர்களுக்கு தாய் இறந்துவிட்டார் என தெரிந்தது அவர்கள் கதறி அழுத்த சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…