20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளருக்கு திருடர் ஐ லவ் யூ என்று எழுதி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் உள்ள மார்கோ பகுதியில் அமைந்துள்ள தனியார் பங்களா வீட்டின் உரிமையாளர் வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.1.4 லட்சம் ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் ‘ஐ லவ் யூ’ என்ற தகவலையும் அங்கிருந்த டிவியில் எழுதி வைத்துவிட்டு சென்றிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…