Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதி.. 5 பேர் தீயில் கருகி பலி!!

Sekar October 02, 2022 & 11:16 [IST]
டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதி.. 5 பேர் தீயில் கருகி பலி!!Representative Image.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் மீது டிராக்டர் மோதியதில் 5 பேர் உயிருடன் தீயில் கருகி பலியாகினர்.

நேற்று நள்ளிரவில் பிஸ்வான் ரியூசா சாலையில் முராட்பூர் கிராமத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல்களின்படி, தங்கோன் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பால்தேவ் சிங் என்ற மகன் பாவ் சர்தார், சீதாபூரில் டிராக்டர் வண்டியில் நெல் விற்கச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எத்தனால் ஏற்றி கோண்டாவுக்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியுடன் டிராக்டர் நேருக்கு நேர் மோதியபோது, எத்தனால் தீப்பிடித்து எரியக்கூடியதாக இருந்ததால் டேங்கர் கவிழ்ந்து தீப்பிடித்தது. டிராக்டரிலும் தீ பற்றி எரிந்தது.

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

காயம்பட்டவர்கள் மீட்க்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போதைய தகவல்களின்படி 5 பேர் தீயில் கருகி பலியானதாக தகவல்கள் தெரிகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்