உலக நாடுகளில் போர் நடப்பவை தடுக்கும் விதமாக இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கலாம் என மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தைவானை சுற்றி நாலாபுறமும் சோதனை நடத்தி வரும் சீனா எப்போது வேண்டுமானாலும் போரை தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அடுத்த 5 வருடங்களுக்கு உலகில் எந்த நாட்டிலும் போர் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் உலக தலைவர்களை கொண்ட ஆணையத்தை உருவாக்கலாம் என மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவம் கூறியுள்ளார்.
அதன்படி, “போர் ஏற்பட்டால் உலக நாடுகள் அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சர்வதேச தலைவர்களை கொண்ட ஒரு ஆணையத்தை அமைப்பது அவசியம். மேலும், இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்தால் நன்றாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…