மரம் அறுக்கும் இயந்திரம் விழுந்து கால் துண்டாகி கொடூர மரணம் குறித்த பின்னணி இதோ.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ராமலை அடுத்த ஜே ஜே நகர் பகுதியில் 65 வயது வரதராஜன் தன்னுடைய மனைவி முனியம்மாளுடன் வசித்து வந்தார். இவர் நெசவு வேலை செய்யும் தொழிலாளி, ஆனால் குடும்பத்தை சமாளிக்க அவ்வப்போது மர வேலையும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியாக நேற்று தன்னுடைய வீட்டில் கட்டில் செய்வதற்கு ஒரு சிறிய இயந்திரத்தை பயன்படுத்தி மரம் அறுத்துக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இயந்திரம் கீழே விழுந்து அவரின் காலை துண்டாக வெட்டியது. வலி தாங்க முடியாமல் வரதராஜன் அலறிய சத்தம் கேட்டு வந்த அவரின் மனைவிக்கும் இந்த இயந்திரத்தால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கால் முழுமையும் துண்டாக விடப்பட்டதால் அதிக ரத்தம் இழந்து வரதராஜன் சம்பவ இடத்திலையே இறந்துவிட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு அவரின் உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. படுகாயம் அடைந்த அவரின் மனைவியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரதராமி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…