Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை….? அரசு கூறிய பதில்…

Gowthami Subramani September 20, 2022 & 18:20 [IST]
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை….? அரசு கூறிய பதில்…Representative Image.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் மிக அதிகமாக குறிப்பாக குழந்தைகளுக்குப் பரவி வருகிறது. அதிலும், பள்ளி செல்லும் குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் தீவிரமாகப் பாதிப்படைகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 25 ஆம் நாள் வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்திலும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மூன்று நாள்களில் குணமாகும் காய்ச்சலுக்கு எவ்வாறு பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது?

இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை. விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்