கோவை காந்திபுரம் பகுதியில் மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் சாலையின் நடுவே படுத்து உறங்கிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பெரும் சிரமத்தை உண்டாகியுள்ளது.
கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து இருப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு அங்கு குடிபோதையில் இளைஞர் ஒருவர் சாலையின் நடுவே தனது வீட்டில் உறங்குவதுபோல் நினைத்து படுத்து உறங்கியுள்ளார்.
இதனால் சிரமமடைந்த சிலர் அந்த நபரிடம் சென்று எழுந்து செல் என கூறியுள்ளனர், ஆனால் அந்த நபரோ அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதை அடுத்து அப்பகுதியில் இருந்த வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த நபரை தர தர என இழுத்து சாலை ஓரத்தில் விட்டனர். ஆனாலும் அதிக மது போதையில் இருந்த அந்த வட மாநில வாலிபரோ அனைவரிடமும் பிரச்சனையில் ஈடுபடும் வகையிலேயே பேசி வந்தார்.
பின்னர் அங்குவந்த போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகாசிங் என்பது கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி புரிவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…