தொற்று பரவல் காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில், சுவாசக் கோளாறு காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்ததாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் இதுவரை அடினோவைரஸ் காரணமாக 12 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இறப்புகளை அடினோவைரஸ் காரணம் என குறிப்பிடப்படவில்லை. இதற்குப் பதிலாக, கடுமையான சுவாச நோய் தொற்றுகள் (ARI) எனக் கூறப்படுகிறது. மேலும், தற்போது வைரஸ் தொற்றுநோய்க்கான எந்த ஆதாரமும் இல்லை என அம்மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…