துபாயில் நடைபெற்ற ஆடம்பர பாகிஸ்தானிய திருமண விழாவில், மணப்பெண்ணின் எடைக்கு நிகரான தங்கம் காட்சிபடுத்தப்பட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில், துபாயில் ஆடம்பரமான பாகிஸ்தான் திருமணம் நடைபெற்றது. இதில், தங்கத்தின் அளவை மணப்பெண்ணின் எடைக்கு சமமாக வைத்து எடை போடப்பட்டதாக காட்சிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தங்கம் போலியானது எனவும், இது திருமணத்தின் ஒட்டுமொத்த கருப்பொருளின் ஒரு பகுதி மட்டுமே என கண்டறியப்பட்டது.
மேலும், தங்கமானது அலங்காரமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இந்த திருமண நிகழ்வு, பாலிவுட் திரைப்படமான ஜோதா அக்பரில் இடம்பெற்ற காட்சியைப் பிரதிபலிப்பதாக இருந்துள்ளது. மேலும், இது குறித்து எழுந்த விமர்சனத்தில், ஆடம்பரமான முறையில் தங்கத்தைப் பயன்படுத்துவது ஒரு வித சிறப்பாக இருந்தாலும், அது குடும்பங்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அமையக் கூடும் எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…