Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காதல் திருமணம் செய்த இளம் ஜோடி.. முதலிரவில் மணமகன் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..

Gowthami Subramani September 15, 2022 & 12:35 [IST]
காதல் திருமணம் செய்த இளம் ஜோடி.. முதலிரவில் மணமகன் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..Representative Image.

ஆந்திர மாநிலத்தில் நேற்று காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிகளின் முதலிரவில் மணமகனுக்கு திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியைச் சேர்ந்தவர் துளசி பிரசாத். இவருக்கு வயது 30. இவரும் மதனப்பள்ளி சந்திரா காலணியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதனையடுத்து, இரு வீட்டாளர்களின் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி திருமணம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அன்றிரவு, முதலிரவு அறைக்கு புதுமண தம்பதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அறைக்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே, மணமகனான துளசி பிரசாத் மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் வெளியே வந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

பின், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். திருமணம் முடிந்த நிலையில், மணமகனுக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தால், குடும்பத்தினரும், கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்