இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் நடந்துள்ள ஒரு சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தில் தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தேஜ்யா என்ற 40-வயது மிக்க நபர் தனப்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று திடீரென மயக்கம் ஏற்பட்டு நிலைதடுமாறி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறியுள்ளார்.
இதையடுத்து ஆம்புலன்ஸில் அவரை ஏற்றிக்கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நடுவழியில் ஆம்புலன்ஸ் நின்றது. எதனால் என்று பார்த்தபோது வாகனத்தில் டீசல் இல்லாமல் நின்றது தெரியவந்துள்ளது.
இதனால் என்ன செய்வதென்று அறியாத உறவினர்கள் ஆம்புலன்சை தள்ளிக்கொண்டு செல்லும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார் என்பது தான் மிகமும் வருத்தனமான செய்தியாகத் தெரியவருகிறது. மேலும் இவ்வளவு முயன்றும் மருத்துவமனைக்கு விரைந்து செல்ல முடியாத காரணத்தினால் தேஜ்யாவின் உயிர் வரும் வழியிலேயே பிரிந்துவிட்டாக கூறப்படுகிறது.இந்த செய்தி அறிந்த அவரது உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சியுற்றனர். மேலும் இந்த செயலுக்குத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தைப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் சமந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு விரைவாகச் செல்ல உருவாக்கப்பட்ட 108-திட்டத்தில் இயங்கும் ஆம்புலன்ஸில் டீசல் இல்லாமல், ஒரு உயிர்ப் பலியானது மக்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்கச் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று பன்ஸ்வாரா மாவட்ட நிர்வாகிகள் உறுதியளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…