நடிகைகள் லட்சுமிராய் மற்றும் அமலா பால் மீது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் நடிகைகள் அமலா பால், லட்சுமி ராய். இருவரும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். தற்போது நடிகை கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிகம் கவனம் செலுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவர் மீதும் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், நடிகைகள் அமலா பால் மற்றும் லட்சுமி ராய் இருவரும் படப்படிப்பு நடைபெறும் இடத்திற்கு பாதுகாவலர்களாக 10-க்கும் மேற்பட்டோரை நியமனம் செய்து அழைத்து வருகின்றனர். அவர்களுக்கும் சம்பளமாக அதிக தொகை கொடுக்க வேண்டியுள்ளது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…