மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, அட்டைகள் மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் கட்டாயம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், அட்டைகள் மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் வாடிக்கையாளர்கள் என்ற அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் எண் சேர்க்கப்படுகிறது என ஆவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்படி ஒரு வசதி இருப்பதே பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். அட ஆமாங்க, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் நேரடியாக ஆவின் நிறுவனத்தில் பணம் செலுத்தி அட்டையை வாடிக்கையாளர்கள் புதுப்பித்து கொள்பவர்களுக்கு அரை லிட்டருக்கு 50 பைசாவும், ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை சலுகை விலையில் பால் கிடைக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…