திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணின் ஜாதகத்தை சரிபார்க்கும்படி லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்தது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை தடை விதித்துள்ளது.
தன்னை திருமணம் செய்வதாக உறுதியளித்து, திருமணத்திற்கு முன்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் சம்மந்தப்பட்ட நபர், அந்த பெண்ணின் ஜாதகத்தில் 'மாங்கல்ய தோஷம்' பிரச்சனை இருப்பதால் தான் பின் வாங்கி விட்டதாகவும், தான் எதுவும் செய்யவில்லை எனவும் தன்னுடைய தரப்பு வாதத்தை முன் வைத்தார். இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண உயர் நீதிமன்றம் லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத் துறையிடம் அந்த பெண்ணின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருக்கிறதா என்பதை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவிப்பது, " தங்கம் முன் வைக்கப்பட்ட வழக்கை தாங்களாகவே முன் வந்து விசாரணை செய்ததாக சுதன்ஷு துலியா மற்றும் பங்கஜ் மிதால் தெரிவித்தனர். மேலும் மே 23, 2023 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பானது இந்த வழக்கின் பொருளாகும். நீதியின் நலன் கருதி, இந்த உத்தரவின் செயல்பாடு மற்றும் விளைவு ஜோதிடத் துறைத் தலைவருக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதைத் தவிர, வழக்கின் தகுதி குறித்து நாங்கள் எதுவும் கூறவில்லை. இந்த வழக்கில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 26, 2023 அன்று உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் மனுவின் தகுதியின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்" என்று உச்ச நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…