இத்தாலியை சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்பவர் துபாயிலிருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் பயணித்த போது மது போதையில் தனது ஆடைகளைக் கழற்றி அரைகுரையாக விமானத்தில் சுற்றியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாவ்லோ பெருசியோ என்பவர் விமானத்தில் எகானமி பிரிவில் டிக்கெட் புக் செய்து பயணித்துள்ளார். திடீரென விமானம் கிளம்பிய பின்னர் தனது பிசினெஸ் கிளாஸ் சீட்டிற்கு மாற்றும்படி தகராறு செய்துள்ளார். அதனை தடுக்க வந்த விமான பணியாளர்களை தாக்கியதோடு தனது ஆடைகளை கழற்றி அரைநிர்வாணமாக விமானத்தில் சுற்றிவந்திருக்கிறார். இதனை பாதுகாப்பு மையங்களுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், விமானம் தரையிறங்கியது மும்பை போலீசார் பாவ்லோ பெருசியோவை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த விரிவான தகவலை சஹார் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளது. "அந்த பயணி அதிகாலை 2.30 மணிக்கு திடீரென எகானமி பிரிவில் இருந்து ஓடி வந்து பிசினஸ் கிளாஸ் சீட்டில் அமர்ந்துக் கொண்டார். இதனை என்ன என்று விசாரிக்க வந்த பெண் விமான பணியாளர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதில் அந்த பயணி விமான பணியாளர்களில் ஒருவரின் முகத்தில் குத்தியதாகவும், மற்றொருவரின் முகத்தில் துப்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு உதவி புரிய வந்தவர்களை பார்த்தது ஆக்ரோஷமாக கத்தியதோடு, தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்ற ஆரம்பித்துவிட்டார். பின்னர் அதே கோலத்தில் விமானத்தில் அங்கும் இங்கும் நடந்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவரை இருக்கையில் அமர்த்தி அமைதி படுத்து வரை விமானத்தில் பெரும் பரபரப்பு நிலவி வந்துள்ளது. பின்பு காலை 4.53 மணியளவில் அந்த விமானம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த பெண் விமானம் ஏர் விஸ்தாராவின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…