இந்தியாவின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், அவருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் 528 வாக்குகளைப் பெற்ற ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றார். இந்நிலையில், வெற்றி பெற்ற சான்றிதழைத் தலைமைத் தேர்தல் ஆணையர் கையொப்பமிட்டு வழங்கினார்.
இதனையடுத்து, இன்று பதவியேற்பு விழா முடிந்ததும் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜெகதீப் தன்கர் மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள் வெங்கைய நாயுடு, அமீது அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…