இந்தியா முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் மெட்ரோ ரயில் நிலையம் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், காவடி ஆட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என மெட்ரோ ரயில் நிலையம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை சென்னை அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…